அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வெள்ளி, 20 ஜனவரி, 2012

திருக்குர்ஆன் - இசுலாம்

திருக்குர்ஆன் இறைத்தூதர் முகம்மது நபி அவர் மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்பட்டு முஸ்லிம்களின் மூல சட்ட நூலாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட முறை .

இத் திரு வசனங்கள் பகுதி பகுதியாக கால சூழ்நிலைக்கேற்பவே இறக்கப்பட்டது. ஹிரா குகையில் தங்கியிருக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக குர்-ஆன் வசனங்களை இறக்கி அருளினான். அதாவது ஜிப்ரீல் எனும் வானவரிடம் இறைவன் கூறுபவற்றை அந்த வானவர் முஹம்மது நபியிடம் அறிவிப்பார்.. முதலாவது வசனமாக சூரா அலக்கின் 5 வசனங்கள் இறக்கப்பட்டது.
அன்று முதல் 23 வருடமாக இறக்கப்பட்டு மனதில் பதியப்பட்டது. இது முற்றிலும் இறைவனது வசனங்கள் ஆகும்.
எனினும் இது மனதில் இருந்து மறைந்து விடும் என்று கருதிய நபியவர்கள், தமது தோழர்களுக்கும் இதனை கற்றுக்கொடுத்தார்கள். மிருகங்களின் தோல், எலும்புகள், ஈத்தம்பழம் விதை போன்றவற்றில் எழுதி வைக்கப்பட்டது.
நபியவர்களின் மரணத்தின் பின்பு ஆட்சியை பெற்ற கலீபா(அரசன்) அபூபக்கர் அவர்களின் காலத்தின் ஏற்பட்ட யமாமா யுத்தத்தில் குர் ஆனை மனமிட்ட பலர் உயிர் பிரிந்தனர். ஆதலால் கல்வி ஞானமுடையவர்கள் பயமுற்று தொகுக்க எண்ணினர். பின்பு உமர் அவர்களின் உபதேசதிர்ற்கு அமைய இது புத்தகங்களிலும், தோள்களிலும் தொகுக்கப்பட்டது.
தொகுக்கப்பட்டவை அப்சா(ரலி) அவர்களால் பாதுகாக்கப்பட்டது. பின்பு உஸ்மான் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமிய பிரச்சாரங்களின் பின்பு அக்கால மக்களால் மனனமிடப்பட்டது. அத்தோடு இதன் பிரதிகளும் அச்சிடப்பட்டு வினியோகிக்கபட்டது.


திருக்குர்ஆனினது முக்கிய சிறப்பு

அன்றைய மக்கள் "இது இறைவாக்கல்ல முஹம்மத் குர்ஆனை புனைந்துரைத்துக்கொண்டிருக்கிறார்" என்று மறுத்துரைத்து பேசியதை குர்ஆனே இவ்வாறு கூறுகிறது
(நபியே,) இவர்கள் இந்த குர்ஆன் முழுதையும் அவர் மீது ஒரேதடவையில் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா? எனக்கேட்கிறனர், இவ்வாறு சிறிது சிறிதாக இறக்கியதெல்லாம் உமது இதயத்தை திடப்படுத்துவதற்கே'
(திருக் குர்ஆன்-25:32)
என்று காரணம் கூறியதோடு நின்று விடாமல் உலகிற்கு விட்ட மெய் சிலிர்க்கச்செய்யும் சவாலே ஐரோப்பியர்களான கீழைதேயவாதிகளை அரபி மொழியில் சத்தியம் பெற வைத்ததையும் ; வரலாற்றாசிரியர்கள், அறிஞர்களை எல்லாம் குர்ஆனை ஆழமாக ஆராயவும் வழியேற்படுத்திக் கொடுத்தையும் காணலாம். இருந்தும் கூட 1400 ஆண்டுகளாக இன்று வரை உலக அறிஞர்களால் இச்சவாலை முறியடிக்க முடியவில்லை என்பதே திருக்குர்ஆனின் சிறப்பம்சமாக கொள்ளப்படுகிறது. இச்சவால் நான்கு தடவைகளில் எதிர்த்தவர்களுக்கு சார்பாக மிகவும் தாழ்ந்து சென்றுள்ளதையும் அவதானிக்க்க முடிகிறது.
  • 01.இந்த குர் ஆனைப்போல ஒன்றை கொண்டு வருவதற்காக, அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலு கூட இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது. - (திருக் குர்ஆன்-17:88)
என்று சவாலை முதலில் தொடங்கும் திருக்குர்ஆன், பின்னைய காலத்தில்
  • 02.அல்லது இவ்வேதத்தை அவர்(முஹம்மத்) பொய்யாக கற்பனை செய்து கொண்டார். என்று அவர்கள் கூறுகிறார்களா?அப்படியானால் நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தால், அல்லாஹ்வை தவிர உங்களுக்கு சத்தியமான அனைத்தயுமே துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் - (திருக் குர்ஆன்-11:13)
என்பதாக பணிந்து வந்த பின்னும் கூட இலக்கியத்தில் பெரும் புலமை கொண்டிருந்த அக்கால அரபிகளால் முடியாது போனதையும் அதனால் திருக்குர்ஆன் மீண்டும்,
  • 03. இன்னும் (முஹம்மத் ) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகமுடையோராக இருந்தால் (சந்தேகத்தில் )உண்மையுடையோராகவும் இருந்தால் அல்லாஹ்வை த்தவிர உங்கள் உதவியாளர்களை ( மொத்தமாக) அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.- (திருக் குர்ஆன்-2:23)
என்பதாகவும் இறுதியாக,
  • 04. ஆகவே, (எழுத, வாசிக்கத்தெரியாத நீர் இட்டுக்கட்டினீர் எனக்கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியையேனும்(வசனத்தையேனும்) அவர்கள் கொண்டு வரட்டும். - (திருக் குர்ஆன்-52:34)
எனவும் கேட்டு தனது பேராற்றலின் முன் இலக்கியவாதிகளை மொத்தமாக மண்டியிட வைத்ததை காணக் கிடைக்கிறது.மொத்தமாக 6666 வசனங்கள் கொண்ட குர்ஆனில் ஒரு வசனத்தையேனும் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்தான் என்ன என்பதை அறிய, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் மூலம் அரபிலக்கியத்தில் புலமைப் பெற்ற மேற்கத்திய அறிஞர் ஆர்தர் ஜே. ஆர்பெர்ரியின் கூற்று உதவுகிறது
குர்ஆனுடைய கருத்துகளை வெளிக்கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபுமொழியில் குர்ஆனில் இருக்கும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிக குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத்துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதையுமுணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச்செய்கிறன. குர்ஆனின் இந்த வினோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய ஓசை நயமே மக்களின் கண்களை கசியச்செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச்செய்கிறது.
[Arthur J. Arberry, The Koran Interpreted, London: Oxford University Press, 1964, p. X.]
மற்றொரு பிரபல ஜெர்மனிய அறிஞர் கொய்தே (Johann Wolfgang von Goethe) இவ்வாறு கூறுகிறார்.
குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அன்னியமாக தெரிகிறது; பிறகு புதுமையாக தெரிகிறது; அடுத்து ஒரு தென்றல் போல் மனதை கவர்ந்து செல்கிறது; மதிப்பச்சத்தை ஏற்பத்த்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச்செய்வதாகவும் உள்ளது. இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது.
[Goethe, quoted in T.P. Hughes' Dictionary of Islam, p. 526.]
இவ்வாறான சிறப்புகளுடன், குர்ஆஆனினது அறைகூவல் 1400 ஆண்டுகளாக இன்று வரை உலக மக்களை நோக்கி விடுக்கப்பட்டுக் கொண்டே வருவதாகவும்; பல நூற்றாண்டுகளாக அரபிலக்கியம் கற்க படையெடுத்த கீழைத்தேயவாதிகளாலும், மற்றும் எகிப்துசிரியாலெபனான்ஈராக்சூடான் என பலநாடுகளில் இலட்சகணக்கில் வாழும் முஸ்லிமல்லாத அரேபிய அறிஞர்களாலும் இச்சவாலை இன்று வரை முறியடிக்க முடியவில்லை என்பதும் வரலாறாகியிருக்கிறது.
திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர்.
அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
(அல்குர்ஆன் 69:44)
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், 'இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்' என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 10:15)
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) 'நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்' என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:101)
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!' என்று.
(அல்குர்ஆன் 10:37-38)
அல்லது 'இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்' என்று அவர்கள் கூறுகிறார்கள்? '(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 11:13)
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) 'இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்' என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: 'நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்¢ நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.'
(அல்குர்ஆன் 11:35)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai