அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வெள்ளி, 26 டிசம்பர், 2014

காலம் பொன்போன்றது - ஒழுக்க நெறிகள்

காலத்தின் மீது ஆணையாக ( அல்குர்ஆன்-103:1)
காலம் பொன் போன்றது. விலை மதிப்பற்றது. சென்றுவிட்ட நேரம் மீண்டும் வரப்போவதில்லை. அதன் அருமையை உணர்த்த இறைவனே ஆணையிட்டுக் கூறுவதென்றால் அதன் மதிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆணையிட்டு வரும் 92 சொற்களில் இதுவும் ஒன்றாகும். காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த குர்ஆனில் தனி ஒருஅத்தியாயமே அருளப்பட்டுள்ளது. 

எனவே,காலத்தைக் கவனமாகக் கையாளுவோம்!
காலத்தின் பெருமையையும், எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நாம் உணர வேண்டும்.

“எனக்கு நேரமே சரியில்லை!” என்று புலம்புகின்ற மனிதர்கள் சிலர். 

“என்றைக்கு நல்ல காலம் பிறக்குமோ!” என்று பெருமூச்சுவிடுபவர் சிலர்.

“நேரமும் காலமும் வந்து ஒண்ணா சேர்ந்திடுச்சிண்ணா நடக்கிறதெல்லாம் நல்லபடியாக நடந்திடும்” என்று நல்ல நேரத்துக்காக சோதிடர்களிடம் நாள் நட்சத்திரம் பார்க்கச் செல்லுபவர்கள் சிலர்.
இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்தான் “நேரம் – காலம் – Time”

இவ்வாறு காலத்தின் பெருமை பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டாலும் நம்மில் பலர் காலத்துக்கு உரிய மதிப்பளிக்காமைக்குக் காரணம் காலத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமைதான்.

“என்ன செய்வதென்றே தெரியவில்லை”
“சே! ரொம்ப சலிப்பாக இருக்கிறது”
“இப்ப போனா போகட்டும்; பிறகு பார்த்துக்கலாம்!”
“என்றைக்காவது ஒருநாள் வராமலா போய்விடும்!”


இப்படியெல்லாம் பேசி, காலத்தை வீணடிப்பவர்களும் உண்டு. நாமும் அவர்களை போல் இல்லாமல் காலம் பொன்போன்றது என்று நினைத்து காலத்தை கவனமாக கையாளுவோம். அவ்வாறு காலத்தைக் கவனமாகக் கையாள வேண்டுமானால் அதற்கான 10 கட்டளைகள்.

1. வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டொழியுங்கள்.

2. சோம்பேறிகள், சுகவாசிகள், வேறு வேலையில்லாதவர்களோடு பழகாதீர்கள்.

3. வாழ்க்கைக்குப் பயன்தராத புத்தகங்களைப் படிக்காதீர்கள்.

4. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த நிகழ்ச்சிகளை மட்டும் கேளுங்கள் – பாருங்கள்.

5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் – நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்; ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.

6. செய்யக்கூடிய வேலையை முக்கியமானவை, அவசரமானவை, வழக்கமானவை, ஒன்றுக்கும் உதவாதவை எனத் தரம் பிரித்து, கிடைக்கும் நேரத்தில் வரிசைப்படி செய்து முடியுங்கள்.

7. எந்த வேலையையும் இதற்குள் முடிப்பேன் என்று ஒரு காலக்கெடு வைத்து அதற்குள் முடிக்க முயற்சியுங்கள்.

8. நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும்? யாரைச் சந்திக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதை இன்றைக்கே குறித்து வையுங்கள்.

9. உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.

10. நல்ல ஓய்வு எடுங்கள். போதிய அளவு உறங்குங்கள். ஓய்வும் உறக்கமுமே ஒருவனை மனஒருமையோடு செயல்படச் செய்யம. நாள் தோறும் காலை மாலை தியானம் (திக்ரு) செய்யுங்கள். “தியானம் மன அமைதியைத் தரும்”. (அல் குர்ஆன்)


பொன்னான நமது நேரங்கள் ஒவ்வொன்றிற்கும் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாகவேண்டும் என்பதை மனதிற் கொண்டு செயல் படுவோமாக! 

படைப்புகளின் அற்புதங்கள்

கறையான்கள்

எறும்புகளைப் போல கறையான் உருவத்தில் சிறியதாயினும் திறமையில் சிறந்தவை. தமது புற்றுகளை உயர்ந்த கட்டடத்தைப் போல எவ்விதத்தவறுமின்றி திட்டமிட்டுக் கட்டுகின்றன. இவ்வாறு ஒன்றல்ல.அடத்தடுத்து பல புற்றுகளை மிக அற்புதமாக உருவாக்குகின்றன. அதன் உயரம் 12 மீட்டர் வரை செல்லும்.தனித்தனி அறைகள்! இளம் குஞ்சுகள் தங்குவதற்குக் தனி அறை. உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்க தனிக் கூடம்; தங்கள் ராணி தங்குவதற்கு தனி அறை. ஏனப் பல பிரிவுகளைக் கொண்ட பல சிறிய பெரிய அறைகளைக் கொண்டது தான் கறையான் புற்று. வெண்டிலே ன்! . (ஏநவெடையவழைn) புற்றுக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் கறையானகள் அவற்றின்  உள்ளறைகளில் உருவாக்கும் பிரத்தியேக காற்றோட்ட வசதி. (Ventilation)மிக மெல்லிய தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர்வாழ குளிர்ந்த காற்று  தேவை. எனவே சீரான சீதோஷ;ண நிலையை ஒரு குறிப்பிடட அளவுக்கு குளிர்ந்த நிலையில் பேணவேண்டியது அவசியமாகிறது.

மூலம்:அல்பாக்கவி
Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai